மலர்: 041
Naaraayanam tam anvaaste vatsam gauriva vatsalaa II
எவனொருவனின் வாயில் எப்பொழுதும் "நாராயணா" எனும் திருநாமம் அனுசந்திக்கப்படுகின்றதோ! அப்படிப்பட்ட மங்களகரமான திருநாமத்தை அனுசந்திப்பவனை , அதிக பாசத்துடன் கன்றினை தொடரும் தாய்பசுவைப்போன்று பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயணன் பின் தொடருகிறான்.
புத்த மதத்தைச்
சேர்ந்த இளங்கோவடிகளும் சிலப்பதிகாரத்தில் ஒரு அருமையான பாடலை அருளியுள்ளார். .
கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப்
படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே
நாராயணா வென்னா நாவென்ன நாவே
மடந்தாழு நெஞ்சத்துக் = மடமையால்
தாழ்ந்த
நெஞ்சைக்
கொண்ட
கஞ்சனார்
= கம்சனின்
வஞ்சம் கடந்தானை = வஞ்சக திட்டங்களை
முறியடித்து
வந்தவனை
நூற்றுவர்பால் = கௌரவர்களிடம்
நாற்றிசையும்
போற்றப்
= நான்கு
திசைகளும்
போற்ற,
நான்கு
திசைகளில்
உள்ளவர்களும்
போற்ற
படர்ந்தா ரணமுழங்கப் = படர்ந்து + ஆரணம்
+ முழங்க
= சென்று,
வேதங்கள்
முழங்க
பஞ்சவர்க்குத் தூது
நடந்தானை
= பஞ்ச
பாண்டவர்களுக்கு தூது சென்றவனை
ஏத்தாத நாவென்ன நாவே = புகழாத
நாக்கு
என்ன
நாக்கே
நாராயணா வென்னா நாவென்ன நாவே
= நாராயணா
என்று
சொல்லாத
நாக்கு
என்ன
நாக்கே.
திருமங்கை ஆழ்வாரும் பெரியதிருமொழியில் நாராயண நாமத்தின் பெருமையை கூறியுள்ளார் :
மஞ்சுலாஞ் சோலை வண்டறை மாநீர் மங்கையார்வாள் கலிகன்றி,
செஞ்சொலாலெடுத்த தெய்வ நன்மாலை இவைகொண்டு சிக்கெனத்தொண்டீர்.,
துஞ்சும்போது அழைமின் துயர்வரில் நினைமின் துயரிலீர் சொல்லிலும் நன்றாம்,
நஞ்சுதான் கண்டீர் நம்முடைவினைக்கு நாராயணாவென்னும் நாமம்.-
Periya Thirumozhi
"நாராயணா
" என்ற நாமமே
நம்
வல்
வினைகளுக்கு
எல்லாம்
நஞ்சு
போன்றது. வல் வினைகள் நம்மை
அண்ட
விடாது,
அண்டிய
வல்
வினைகளை
களைந்து
அவற்றின்
மூலம்
வரும்
துன்பங்களில்
இருந்து
நமக்கு
விடுதலை
தரும்.