Thursday, September 29, 2022

உத்தமன் பேர் பாடி

 மலர்: 028




















यो मामेवमसम्मूढो जानाति पुरुषोत्तमम् |
स सर्वविद्भजति मां सर्वभावेन भारत ||BG15.19 ||
yo mām evam asammūḍho jānāti puruṣhottamam I
sa sarva-vid bhajati māṁ sarva-bhāvena bhārata II
அர்ஜுனா ! யார் மயக்கம் அற்றவனாய் இவ்வாறு என்னை 'புருஷோத்தமன்' என்று அறிகிறானோ எல்லாம் அறிந்த அவன் முழு மனத்துடன் என்னை வழுத்துகிறான் .
 மனிதர்களில் நான்கு வகையினர் உண்டு. அதமா அதமன், அதமன், மத்யமன், உத்தமன் என்பவை எவை.
அதமா அதமன்
பிறரையும் வாழ விடாமல், தானும் வாழாமல் இருக்கும் பயனற்றவனே அதமா அதமன்.
அதமன்
தான் மட்டும் வாழ நினைப்பவன் அதமன்.
மத்யமன்
தான் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவன் மத்யமன்.
உத்தமன்
தான் கெட்டாலும் பிறர் வாழ வேண்டும் என்ற உயர்ந்த எண்ணம் கொண்டவன் சிறந்த உத்தமன்.
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து ஏலோர் எம்பாவாய்.
    பிறரிடம் கையேந்தி யாசகம் பெறுவது இழிசெயல். தனக்கு இழிவானாலும், தேவர்களின் நன்மைக்காக வாமனர் மகாபலிசக்கரவர்த்தியிடம் யாசகம் கேட்டார். அதன் காரணமாகவே ஆண்டாள் வாமனரை உத்தமன் என்று சிறப்பாகக் குறிப்பிடுகிறாள்.

இப்பொது உத்தமனை பாடிய சில பாசுரங்களை பார்ப்போம்.

ஊரான் குடந்தை உத்தமன்
      ஒரு கால் இரு கால் சிலை வளையத்
தேரா அரக்கர் தேர்-வெள்ளம்
      செற்றான் வற்றா வரு புனல் சூழ்
பேரான் பேர் ஆயிரம் உடையான்
      பிறங்கு சிறை வண்டு அறைகின்ற
தாரான்-தாரா வயல் சூழ்ந்த
      சாளக்கிராமம் அடை நெஞ்சே- -பெரியதிருமொழி 

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Thursday, September 22, 2022

சேர்க்கையின் தன்மை -संसर्गजा दोषगुणाः भवन्ति

 மலர்: 027

நற்குணங்கள் நல்லவரைச் சார்ந்துஇருக்கும்போது பயன் உள்ளதாக இருக்கும் . அதுவே தீயவர்களிடம் தீமைவிளைவிப்பதாக அமையும். உதாரணத்திற்கு தீயவர்களிடம் கல்வி விவாதத்திற்கும் ,செல்வம் கர்வத்தை விளைவிப்பதாகவும், சக்தி பிறரைத்துன்புறுத்தவும் காரணமாகிறது.  நல்லவர்களிடம் அதுவே ஞானத்திற்கும் ,தானத்திற்கும் , பிறரைக் காப்பதற்கும் செயல்படும் .

विद्या विवादाय धनं मदाय शक्तिः परेषां परिपीडनाय ।
खलस्य साधोर्विपरीतमेतत्ज्ञा नाय दानाय च रक्षणाय II
Vidya vivaadaayadhanam madaaya shaktih paresham paripeedanaaya I
khalasya saadhor vipareetam etad gyaanaaya daanaaya cha rakshanaaya II
गुणा गुणज्ञेषु गुणा भवन्ति, ते निर्गुणं प्राप्य भवन्ति दोषाः।
सुस्वादुतोयाः प्रभवन्ति नद्यः, समुद्रमासाद्य भवन्त्यपेयाः॥
guṇā guṇajñeṣu guṇā bhavanti, te nirguṇaṃ prāpya bhavanti doṣāḥ
susvādutoyāḥ prabhavanti nadyaḥ, samudramāsādya bhavantyapeyāḥ

ஒரு ஊரில் இரண்டு கிளிகள் இருந்தன . அவைகள் பிரிந்து ஒரு கிளி ஆச்ரமத்திலும் மற்றோரு கிளி திருடர்களிடத்திலும் வளர நேர்ந்தது.
சேர்க்கையினால் ஏற்படும் பலன்களை தெரிவிக்கும் ஸ்லோகம் இதோ
 अहं मुनीनां वचनं श्रृणोंमि, श्रृणोत्मयं यद् यवनस्य वाक्यम|
चास्य दोषो मे गुणों वा, संसर्गजा दोषगुणाः भवन्ति|”

Aham Muneenam vachanam shrunomi Gavashananam sa shrunothi vakyam
 Nachasya dosho na cha sadguno va Samsargaja dosha guna bhavanthi
।।
The parrot said to the king:
I hear the words of ascetics and that parrot hears the words of butchers who eat beef. It is not a fault of that bird (if it speaks bad language). It is not a merit in me (if I speak good language). Merits and defects arise from our company. 
A man learns the speech and language of the company which he keeps. The parrot that is brought up in the ashram of a Sanyasi speaks in a sweet and disciplined manner; on the other hand, the parrot that is brought up in the slaughter-house of a butcher utters unpleasant and unclean words.
இதையே வள்ளுவர் மிக அழகான வரிகளில் குறிப்பிடுகிறார்:
நன்பால் கலந்தீமை யால்திரிந்து அற்று
வைத்த கலத்தின் தீமையால் நல்ல பால் தன் சுவை முதலியன கெட்டாற் போன்றதாகும். Thirukkural 1000

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Monday, September 19, 2022

இந் நின்ற தூணினும் உளன்

 மலர்: 026


பள்ளியில் ஓதி வந்த தன் சிறுவன்*
வாயில் ஓர் ஆயிரம் நாமம்
ஒள்ளிய ஆகிப் போத ஆங்கு அதனுக்கு*
ஒன்றும் ஓர் பொறுப்பு இலன் ஆகி
பிள்ளையைச் சீறி வெகுண்டு தூண் புடைப்ப*  
பிறை எயிற்று அனல் விழிப் பேழ் வாய்
தெள்ளிய சிங்கம் ஆகிய தேவை*  
திருவல்லிக்கேணிக் கண்டேனே.

திருமங்கையாழ்வார் அருளிச்செய்த பெரிய திருமொழி-2.3.8

பள்ளியில் கல்வி கற்று வந்த தன் மகன் (பிரகலாதன்) வாயில் ஆயிரம் பெருமாள் பெயர்கள் ஒளியுடன் அழகாக ஞானத்தால் (கூறுவதை பார்த்து) அந்த நேரம் சிறிதும் பொறுக்க இயலாதவன் ஆகி தன் மகனை சீறி வெகுண்டு (நாராயணன் எங்கே இருக்கிறான்டா என்று கேட்க,  எங்கும் இருப்பான் என்று பிரகலாதன் கூற, எங்கே இந்த தூணில் காட்டுடா பார்ப்போம் என்று) தூணை அடிக்க, வளைந்த கூரான பற்களும், நெருப்பு போன்ற கண்களும், பெரிய வாயும் (உடைய) தெளிந்த தூய்மையான நரசிங்கம் ஆகிய (என் தேவாதி) தேவனை, திருவல்லிக்கேணியில் கண்டேனே

கம்ப ராமாயணத்திலே இரணியவதைப்படலத்திலே சில அருமையான பாடல்களில் இதே விஷயம் கூறப்பட்டுள்ளது.

சாணினும் உளன்; ஓர் தன்மை, அணுவினைச் சத கூறு இட்ட
கோணினும் உளன்; மா மேருக் குன்றினும் உளன் ; இந் நின்ற
தூணினும் உளன்; நீ சொன்ன சொல்லினும் உளன் ; இத் தன்மை
காணுதி விரைவின்" என்றான்; "நன்று" எனக் கனகன் சொன்னான்.

"பிளந்தது தூணும் ஆங்கே பிறந்தது சீயம்-பின்னை
வளர்ந்தது திசைக் எட்டும் பகிரண்டம் முதல் மற்றும்
அளந்தப் புறத்துச் செய்கை யார் அறிந்து அறைய கிற்பார்
கிளர்ந்தது ககன முட்டை கிழிந்தது கீழும் மேலும்.

பிளந்த தூணியிருந்து வெளிப்பட்ட அந்த சிங்கம் எட்டுத் திசைகளிலும் பரவி, இந்த வையகத்திற்கு அப்பால் உள்ள அண்டம் முதலிய பிற கோள்கள், பிற படைப்புகள் ஆகியவற்றை அளப்பதாக நீண்டு வளர்ந்தது. அதனால் உலக உருண்டை மேலும் கீழும் ஏற்பட்டதுபோல் தோற்றம் கொண்டது.

மேலும் ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு அற்புதமான ஸ்லோகம் :

सत्यं विधातुं निजभृत्यभाषितं
व्याप्तिं भूतेष्वखिलेषु चात्मन:
अद‍ृश्यतात्यद्भ‍ुतरूपमुद्वहन्
स्तम्भे सभायां मृगं मानुषम् १७

satyaṁ vidhātuṁ nija-bhṛtya-bhāṣitaṁ
vyāptiṁ ca bhūteṣv akhileṣu cātmanaḥ
adṛśyatātyadbhuta-rūpam udvahan
stambhe sabhāyāṁ na mṛgaṁ na mānuṣam
To prove that the statement of His devotee Prahlāda was substantial — in other words, to prove that the Supreme Lord is present everywhere, even within the pillar of an assembly hall — the Supreme Personality of Godhead, Hari, exhibited a wonderful form never before seen. The form was neither that of a man nor that of a lion. Thus the Lord appeared in His wonderful form in the assembly hall.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Friday, September 16, 2022

ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே!

 மலர்: 025


கோவர்தன கிரிதர கோவிந்த கோகுல பாலாக பரமானந்த I
ஸ்ரீவத்சாங்கித ஸ்ரீகௌஸ்துப தர  பாவக பயஹர பாஹி முகுந்த IIநாராயண தீர்த்தர்

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 
அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 
சென்று சேர் திருவேங்கட மா மலை 
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே- திருவாய்மொழி3.3.8

கல் மாரியாலே திருவாய்ப்பாடியில் இருந்தவர்கள் துன்பப்பட, கோவர்த்தன மலையை ஏந்தி அவர்களைக் காத்தவனாய், அன்று பூமியை அளந்து தனக்காகக் கொண்ட உபகாரகனான உயர்ந்த தலைவன் சென்று சேர்ந்த திருவேங்கடமாகிற பெரிய திருமலை ஒன்றை மட்டும் தொழ, நம்முடைய விரோதிகள் தானே ஒழிந்துவிடும்.

மேய் நிரை கீழ் புக மா புரளச் சுனை
வாய் நிறை நீர் பிளிறிச் சொரிய இன
ஆநிரை பாடி அங்கே ஒடுங்க அப்பன்
தீ் மழை காத்துக் குன்றம் எடுத்தானே.–
திருவாய்மொழி- 7-4-10

மேய்கிற பசுக்களானவை கீழே ஒதுங்கும்படியும் கீழ் மேலாக மலையை எடுத்ததால் மலையில் வாழும் யானை முதலிய மிருகங்கள் புரண்டு விழும்படியும் சுனைகளின் வாய்வரை நிறைந்த நீரானது பெரிய கோஷத்தோடு சொரியும்படியும் தன் இனமான ஆயர்களையும் தன் பசுக்களையுமுடைய திருவாய்ப்பாடி முழுவதும் அங்கே ஒடுங்கும்படியும் ஆபத்தைப் போக்குபவனான கண்ணன் தீய மழையைத் தடுக்க கோவர்த்தனம் என்கிற மலையை எடுத்தான்.

குன்று குடையாய் எடுத்தாய்குணம் போற்றி!
பெருமழை பெய்து ஆயர்பாடி வெள்ளத்தில் தவித்த போது கோவர்த்தனம் என்னும் குன்றை குடையாக எடுத்தவனேஉன் குணம் போற்றி!

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.