Tuesday, November 29, 2022

எட்டின் மஹத்வம்

 மலர்: 036

எட்டு என்றால் முதலில் தோன்றுவது பதஞ்சலி முனிவரின் அஷ்டாங்கயோகம்.

योगाङ्गानुष्ठानादशुद्धिक्षये
ज्ञानदीप्तिराविवेकख्यातेः॥२८॥28
यमनियमासनप्राणायामप्रत्याहार
धारणाध्यानसमाधयोऽष्टावङ्गानि॥२९॥29 Patanjali yoga sutra
Yogāṅgānuṣṭhānādaśuddhikṣaye
jñānadīptirāvivekakhyāteḥ||28||
Yamaniyamāsanaprāṇāyāmapratyāhāra
dhāraṇādhyānasamādhayo'ṣṭāvaṅgāni||29||
On the destruction of impurity through the practice of the limbs of Yoga, (there emerges) the Light of Knowledge culminating in discriminative knowledge .28
Yama ,Niyama , Āsana , Prāṇāyāma , Pratyāhāra , Dhāraṇā , Dhyāna  (and)
Samādhi - (are) the eight limbs --aṅga-- (of Yoga)
 .29

அட்டாங்க யோகத்தினால் அட்டமா சித்திகள் என்னும் எட்டுத் திறமைகளை அடைய முடியும். இவ்வாறு அட்டமா சித்திகள் பெற்றவர்கள் தான் சித்தர்கள்அட்டமா சித்தி எனப்படும்.  இவை: 1 அணிமா, 2 மகிமா, 3 கரிமா, 4 கிமா, 5 பிராப்தி, 6 பிரகாமியம், 7 ஈசத்துவம், 8 வசித்துவம்.


கோளில் பொறியின் குணம் இலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.

எட்டுகுணங்களாவன:தன்வயத்தன்ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். 


எட்டின் பெருமையை கூறும் அப்பர்பெருமானின் ஒரு அருமையான பாடலை பார்ப்போம்.

புகையெட்டும் போக்கெட்டும் புலன்க ளெட்டும்
    பூதலங்க ளவையெட்டும் பொழில்க ளெட்டும்
கலையெட்டுங் காப்பெட்டுங் காட்சி யெட்டுங்
    கழற்சே வடியடைந்தார் களைக ணெட்டும்
நகையெட்டும் நாளெட்டும் நன்மை யெட்டும்
    நலஞ்சிறந்தார் மனத்தகத்து மலர்க ளெட்டும்
திகையெட்டுந் தெரிப்பதற்கு முன்னோ பின்னோ
    திருவாரூர் கோயிலாக் கொண்ட நாளே.

1.புகை=புகக் கூடிய இடங்கள்: இங்கே உயிர்கள் புகக் கூடிய இடங்களை குறிப்பிடுகின்றார். எட்டு பிறவிகளாவன: தேவர், மனிதர், விலங்குகள், பறவைகள், ஊர்வன, நீரில் வாழ்வன, தாவரங்கள் மற்றும் நரகர் என்பன.

2. போக்கு=குற்றம்: எட்டு வகையான குற்றங்கள்அறியாமை, மயக்கம், யான் எனப்படும் அகங்காரம், எனது எனப்படும் மமகாரம், விருப்பு, வெறுப்பு, நல்வினை மற்றும் தீவினை ஆகிய எட்டும் உயிருக்கு உள்ள குற்றங்களாகும்.

3. ஆன்ம தத்துவம், இருபத்து நான்கு தத்துவங்களை சுருக்கி எட்டு தொகுப்பாக கூறுவதும் வழக்கம்.

ஐம்பூதங்கள்,  ஐந்து ஞானேந்திரியங்கள்,

ஐந்து கன்மேந்திரியங்கள், ஐந்து தன்மாத்திரைகள், மனம், புத்தி, சித்தம், அகங்காரம்.

4. பூதலங்கள் எட்டு: கீழுலகங்கள் ஏழுடன் நிலவுகத்தையும் சேர்த்து எட்டு உலகங்கள். மேல் உலகங்கள் ஏழுடன் நிலவுலகத்தையும் இணைத்து எட்டு உலகங்கள் என்று பொருள் கொள்ளினும் பொருந்தும்.

5. பொழில்கள் என்றால் தீவு என்று பொருள்.

நாவல்,சாகம்,குசை, கிரௌஞ்சம், சால்மலி, கோமேதகம், புட்கரம் மற்றும் தேவர் உலகம் ஆகியவை எட்டு தீவுகள்.

6.எட்டுகடல்களாவன(கலை): உவர்க்கடல், பாற்கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், கருப்பஞ்சாற்றுக் கடல், தேன் கடல், நன்னீர்க்கடல், மற்றும் சக்கரவாக மலையைச் சூழ்ந்துள்ள கடல்.

7. காப்பு என்பதற்கு அரண் என்று பொருள். இந்த எட்டு கடல்களைச் சூழ்ந்த மலைகள் எட்டும் எட்டு அரண்களாக கருதப்படுகின்றன. நிடதம், ஹேமகூடம், இமாசலம், நீலம், சுவேதம், சிருங்கவான், மாலியவான், கந்தமாதனம் ஆகிய மலைகள் எட்டு மலைகளாகும்.

8. காட்சி எட்டு: எட்டு காட்சிகள் என்பதை எட்டு வீரட்டத் தலங்களில் புரிந்த வீரச் செயல்கள்

9. களைகண்: உலகங்கள்- அவையாவன, புவலோகம், சுவலோகம், மகலோகம், ஜனலோகம், தபலோகம், சத்யலோகம், விஷ்ணுலோகம் மற்றும் உருத்திரலோகம்.

10. நகை எட்டு: நகை என்பன ஒளிவீசும் கோள்களையும் நட்சத்திரக் கூட்டங்களையும் குறிக்கும். சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி மற்றும் நட்சத்திரக் கூட்டங்கள்.

11. நாள் எட்டு: நாழிகை, நாள், வாரம், பட்சம், மாதம், ருது, அயனம், வருடம் என்பன

12. நன்மை எட்டு: அறம், பொருள், இன்பம், வீடு, மறம், இன்மை (இல்லாமை), துன்பம், பிறப்பு ஆகியவை.

13.அகமலர்கள்எட்டு: கொல்லாமை,இரக்கம்,

ஐம்பொறிகளை அடக்குதல், பொறுமை, தவம், வாய்மை, அன்பு, அறிவு.

14. திகை என்பது திசை என்ற சொல்லின் திரிபு.

நேர்த்திசைகள் நான்கும், கோணத் திசைகள் நான்கும் சேர்ந்து எட்டு.

 

எட்டு தொகுதிகள் என்று கருதப்படும் பொருட்கள் அனைத்தும் தோன்றுவதற்குமுன்னமே தோன்றிய திருக்கோயில்திருவாரூர் திருக்கோயில் என்று பாடலை அப்பர் பிரான் முடிக்கின்றார்.


சிவபெருமான் விரும்பி அணிகின்ற எட்டு மலர்கள்:

புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம், நந்தியாவட்டை, குவளை, பாதிரி, அலரி, செந்தாமரை

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


Thursday, November 24, 2022

உளன் எனில் உளன்

  மலர்: 035

एको वशी सर्वभूतान्तरात्मा
एकं रूपं बहुधा यः करोति
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीराः
तेषां सुखं शाश्वतं नेतरेषाम् १२॥
eko vaśī sarvabhūtāntarātmā
ekaṃ rūpaṃ bahudhā yaḥ karoti I
tamātmasthaṃ ye’nupaśyanti dhīrāḥ
teṣāṃ sukhaṃ śāśvataṃ netareṣām II  Katopanisad
There is one Supreme Ruler, the inmost Self of all beings, who makes His one form manifold. Eternal happiness belongs to the wise, who perceive Him within themselves-not to others. 
யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்தில் கம்பன் நீ எவ்வாறு வணங்குகிறாயோ அவ்வாறே இறைவன் வந்து அருள் புரிவான் என்ற பரம்பொருள் தத்துவத்தை விளக்குகிறார்:

ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா.
இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்;
பல என்றால் பலவேதான்;
அப்படி அல்ல என்றாலும் அல்லதான்;
அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்;
இல்லை என்றாலும் இல்லைதான்;
உண்டு என்றாலும் உண்டுதான்;
எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று! 

கம்பன் தன்ஆசானான நம்மாழ்வாரின் பாடலை மனதில் கொண்டே இதை எழுதிருக்கலாம் என்று கருத வாய்ப்பு இருக்கிறது.
 உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் 
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் 
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் 
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.

இறைவன் ஒன்றாகவும் பலவாகவும் இருப்பதை தாயுமானவர் தன் "சிதம்பர ரஹஸ்யத்தில்" விளக்கியுள்ளார்.

ஒன்றாகிப் பலவாகி
ப் பலவாக் கண்ட
ஒளியாகி வெளியாகி உருவு மாகி
நன்றாகித் தீதாகி மற்று மாகி
நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி
இன்றாகி நாளையுமாய் மேலு மான
எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்
கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே.

(பொ - ள்) "ஒன்றாகிப் . . . நண்ணாதாகி" - (சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நிற்கும் சீர்மையன். அதனால் பொருள் தன்மையில்) ஒன்றாகியும், ஆருயிர்களுடனும் அளவிலா அண்டங்களுடனும் கலந்து இயைந்து இயக்குதலால் பலவாகியும், பலவேறு வகைப் பொருள்களுக்கும் அகம்புறமாய் ஒளி கொடுத்துக்கொண்டிருந்தருளும் பேரொளியாகியும், அவற்றுக்கு இடங்கொடுக்கும் வெளியாகியும் அவ்வொளிகளின் வடிவங்களாகியும், ஆருயிர்கள் புரியும் இருவினைக்கீடாக அவற்றின் பயன்களைக் கூட்டுவிக்கும் முறையால் நன்றாகியும் தீயதாகியும், இன்னும் பல வேறுவகையாகக் காணப்படும் உலகியற் பொருள்களோடு நீங்காது விரவி நிற்றலின் அவையும் ஆகியும், ஒடுக்கமுடன் தோற்றங்கள் ஒரு சிறிதும் தனக்கு வந்து பொருந்துதல் இல்லாத நிலைமையனாகியும்;


"இன்றாகி . . . விண்ணே" - காலமெய் எனப்படும் காலதத்துவத்தை இயக்கும் இயல்பினால் இன்றெனவும் நாளையெனவும் சொல்லப்படும் நாள்களுமாகியும், அதன்மேலும், கிழமை, திங்கள் பருவம், ஆண்டு முதலிய காலங்களுமாகித் திகழ்கின்ற எந்தையே! எளியேங்கள் தலைவனே! என்று பலவாறு பரிவுடனழைத்து ஏக்கம் எய்திப் புனிற்றுக் கன்றின் நிலைமையினை எய்திக் கதறுதல் நீங்காத எளியேங்கட்கு, ஈன்றணிய செம்மை நிறம் வாய்ந்த கறவையாகி வல்விரைவில் வந்து வேண்டும் திருவருள் புரியும் பெருந்தண்ணளி வாய்ந்த பேரருள் வெளியே. புனிற்றுக் கன்று - ஈன்றணிய கன்று.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.