Thursday, November 24, 2022

உளன் எனில் உளன்

  மலர்: 035

एको वशी सर्वभूतान्तरात्मा
एकं रूपं बहुधा यः करोति
तमात्मस्थं येऽनुपश्यन्ति धीराः
तेषां सुखं शाश्वतं नेतरेषाम् १२॥
eko vaśī sarvabhūtāntarātmā
ekaṃ rūpaṃ bahudhā yaḥ karoti I
tamātmasthaṃ ye’nupaśyanti dhīrāḥ
teṣāṃ sukhaṃ śāśvataṃ netareṣām II  Katopanisad
There is one Supreme Ruler, the inmost Self of all beings, who makes His one form manifold. Eternal happiness belongs to the wise, who perceive Him within themselves-not to others. 
யுத்த காண்டத்தின் கடவுள் வாழ்த்தில் கம்பன் நீ எவ்வாறு வணங்குகிறாயோ அவ்வாறே இறைவன் வந்து அருள் புரிவான் என்ற பரம்பொருள் தத்துவத்தை விளக்குகிறார்:

ஒன்றே என்னின் ஒன்றேயாம்,
பல என்று உரைக்கின் பலவேயாம்
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமேயாம்
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கின் உளதேயாம்
நன்றே நம்பி குடி வாழ்க்கை
நமக்கு இங்கு என்னோ பிழைப்பு அம்மா.
இறைவன் ஒன்று என்று சொன்னால் ஒன்றுதான்;
பல என்றால் பலவேதான்;
அப்படி அல்ல என்றாலும் அல்லதான்;
அப்படித்தான் என்றால் ஆம் அப்படித்தான்;
இல்லை என்றாலும் இல்லைதான்;
உண்டு என்றாலும் உண்டுதான்;
எல்லாம் நமது நம்பிக்கையில்தான் இருக்கிறது. இதனை உணர்ந்து கொண்டால் நம் வாழ்வு நன்று! 

கம்பன் தன்ஆசானான நம்மாழ்வாரின் பாடலை மனதில் கொண்டே இதை எழுதிருக்கலாம் என்று கருத வாய்ப்பு இருக்கிறது.
 உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் 
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள் 
உளன் என இலன் என இவை குணம் உடைமையில் 
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே.

இறைவன் ஒன்றாகவும் பலவாகவும் இருப்பதை தாயுமானவர் தன் "சிதம்பர ரஹஸ்யத்தில்" விளக்கியுள்ளார்.

ஒன்றாகிப் பலவாகி
ப் பலவாக் கண்ட
ஒளியாகி வெளியாகி உருவு மாகி
நன்றாகித் தீதாகி மற்று மாகி
நாசமுட னுற்பத்தி நண்ணா தாகி
இன்றாகி நாளையுமாய் மேலு மான
எந்தையே எம்மானே என்றென் றேங்கிக்
கன்றாகிக் கதறினர்க்குச் சேதா வாகிக்
கடிதினில்வந் தருள்கூருங் கருணை விண்ணே.

(பொ - ள்) "ஒன்றாகிப் . . . நண்ணாதாகி" - (சிவபெருமான் யாண்டும் நீக்கமறச் செறிந்து நிற்கும் சீர்மையன். அதனால் பொருள் தன்மையில்) ஒன்றாகியும், ஆருயிர்களுடனும் அளவிலா அண்டங்களுடனும் கலந்து இயைந்து இயக்குதலால் பலவாகியும், பலவேறு வகைப் பொருள்களுக்கும் அகம்புறமாய் ஒளி கொடுத்துக்கொண்டிருந்தருளும் பேரொளியாகியும், அவற்றுக்கு இடங்கொடுக்கும் வெளியாகியும் அவ்வொளிகளின் வடிவங்களாகியும், ஆருயிர்கள் புரியும் இருவினைக்கீடாக அவற்றின் பயன்களைக் கூட்டுவிக்கும் முறையால் நன்றாகியும் தீயதாகியும், இன்னும் பல வேறுவகையாகக் காணப்படும் உலகியற் பொருள்களோடு நீங்காது விரவி நிற்றலின் அவையும் ஆகியும், ஒடுக்கமுடன் தோற்றங்கள் ஒரு சிறிதும் தனக்கு வந்து பொருந்துதல் இல்லாத நிலைமையனாகியும்;


"இன்றாகி . . . விண்ணே" - காலமெய் எனப்படும் காலதத்துவத்தை இயக்கும் இயல்பினால் இன்றெனவும் நாளையெனவும் சொல்லப்படும் நாள்களுமாகியும், அதன்மேலும், கிழமை, திங்கள் பருவம், ஆண்டு முதலிய காலங்களுமாகித் திகழ்கின்ற எந்தையே! எளியேங்கள் தலைவனே! என்று பலவாறு பரிவுடனழைத்து ஏக்கம் எய்திப் புனிற்றுக் கன்றின் நிலைமையினை எய்திக் கதறுதல் நீங்காத எளியேங்கட்கு, ஈன்றணிய செம்மை நிறம் வாய்ந்த கறவையாகி வல்விரைவில் வந்து வேண்டும் திருவருள் புரியும் பெருந்தண்ணளி வாய்ந்த பேரருள் வெளியே. புனிற்றுக் கன்று - ஈன்றணிய கன்று.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

 

No comments:

Post a Comment