மலர்: 039
श्रीमान् नारायणो विष्णुर्वासुदेवोऽभिरक्षतु I
வேஷம் போட்டாலும் கிருபை பண்ணுகிறான் என்று அருளும் திரு வாய் மொழி- 5.1.1
என் கருமாணிக்கமே! என்று என்று,*
பொய்யே கைம்மைசொல்லி*
புறமே புறமே ஆடி.*
மெய்யே பெற்றொழிந்தேன்,*
விதி வாய்க்கின்று காப்பார் ஆர்,*
ஐயோ கண்ணபிரான்!*
அறையோ இனிப்போனாலே. 5.1.1
பொருள்
கையார் =
கையில்
சக்கரத்து = சக்கரத்தைக் கொண்ட
என் கரு மாணிக்கமே =
என் கரு மாணிக்கமே
என்றென்று = என்று என்று
பொய்யே கைம்மை சொல்லிப்
= பொய்யாகச் சொல்லி
புறமே புறமே ஆடி =
உலக விஷயங்களில் மூழ்கி
(இருந்தாலும்)
மெய்யே பெற்று ஒழிந்தேன் =
உண்மையான உன்னை பெற்றேன்
விதிவாய்கு இன்று காப்பார் யார் =
உன் அருள் பெறுவதை யார் தடுக்க முடியும்
ஐயோ = ஐயோ
கண்ணபிரான் = கண்ணபிரான்
அறையோ இனிப் போனாலே =
நீ என்னை விட்டுப் போய் விடுவாயா ?
(போகமாட்டாய், போக முடியாது )
Uttering, "Holder of bright discus!",
"My gem-hued Lord!", and many such shallow praises, I roamed and
danced, and attained the truth, who can prevent what fortune favours ? My Lord,
Krishna, if you leave me now, will I let you go?
மணிவாசக
பெருமானும் இதே போன்று அருளி செய்துள்ளார்
ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே
தேனே அமுதே கரும்பின் தெளிவே தித்திக்கும்
மானே அருளாய் அடியேன் உனைவந் துறுமாறே
நான் உண்மையானவன் அல்ல. என் மனமும் சுத்தமானது அல்ல
என் அன்பு போலி அன்பு இருந்தாலும், உன்னை நினைத்து மனம் உருகி அழுதால் நான் உன்னை அடைய முடியும், அதற்கும் நீ தான் அருள் புரிய வேண்டும்" என்று உருகுகிறார் மணி வாசகர்
No comments:
Post a Comment