மலர்: 046
गजेन्द्र रक्षा त्वरितं भवन्तं
ग्राहैरिवाहं विषयैर्विकृष्टः ।
अपार विज्ञान दयानुभावम्
आप्तं सतामष्टभुजं प्रपद्ये । । १ । ।
gajendra
rakShA tvaritaM bhavantaM
grAhairivAhaM viShayairvikRRiShTaH |
apAra vij~nAna dayAnubhAvam
AptaM satAmaShTabhujaM prapadye | | 1 | |
grAhairivAhaM viShayairvikRRiShTaH |
apAra vij~nAna dayAnubhAvam
AptaM satAmaShTabhujaM prapadye | | 1 | |
In this sloka, Swami Desikan compares
our lives to one being attacked and torn apart by our senses and dragged
towards them on all sides as if by vicious crocodiles, and invokes Bhagavan's
mercy and protection just as in the case of Gajendra when attacked by the
crocodile.
எம்பெருமான் சர்வ சக்திமான் என்றபோதும் தன் அடியார்க்கு ஒரு துன்பம் வந்தபோது தானே நேரில் வந்து உதவும் குணத்தை ஆழ்வார்கள் பல பாடல்களில் அனுபவித்து உள்ளனர். அதில் சில பாடல்களை இன்றய விஷயமாக பார்க்கலாம் .
சக்கரநல் வலத்தையாய்த்
தொழுங்காதல் களிறுஅளிப்பான்
புள்ஊர்ந்து தோன்றினையே!
மழுங்காத ஞானமே
படையாக மலர்உலகில்
தொழும்பாயார்க்கு அளித்தால்உன்
சுடர்ச்சோதி மறையாதே? Thiruvaimozhi-3,1.9
(தொழும் காதல் - தொழவேணுமென்கிற காதலையுடைய
களிறு - கஜேந்திராழ்வானை)
தொழ வேண்டும்
என்ற
பெரும்
காதல்
உணர்வுடன்
இருந்த
களிறு
ஆகிய
கஜேந்திரன்
என்னும்
யானையைக்
காப்பாற்றுவதற்காக, மழுங்குதல் இல்லாத கூர்மை
பொருந்திய
வாய்களை
உடைய
சக்கரத்தை
வலக்கையில்
ஏந்தி,
கருடப்பறவையின் மேல் ஏறி, யானை
துன்பமடைந்து
கொண்டிருந்த
மடுக்கரையில்
தோன்றினீர்!
அது
பொருந்தும்!
உமது
மழுங்காத
ஞானமே
கருவியாகக்
கொண்டு
அனைத்தையும்
நடத்திக்
கொள்ளலாமே!
விரிந்து
பரந்த
உலகில்
தொழும்
அடியவர்களுக்கு உதவுவதற்கு நேரில் வந்து
தோன்றினால்
உமது
பெரும்
பேரொளி
குன்றி
விடாதா?
திருமங்கை ஆழ்வாரும் ஒரு அற்புதமான பாடல் திருஅல்லிக்கேணி கஜேந்திர வரதனுக்காக அருளியுள்ளார்.
மீனமர் பொய்கை நாண்மலர் கொய்வான் வேட்கையி னோடுசென் றிழிந்த,
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
கானமர் வேழம் கையெடுத் தலறக் கராவதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப்புள் ளூர்ந்து சென்றுநின் றாழிதொட் டானை,
தேனமர் சோலை மாடமா மயிலைத் திருவல்லிக் கேணிக்கண் டேனே.
மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணுமென்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன் தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக முதலையானது அவ் யானையின் காலைத் கௌவிக்கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாஹனமாகக் கொண்டு பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்.
No comments:
Post a Comment