மலர்: 018
ஞானமே முக்திக்கு ஒரு சிறந்த சாதனம் என்று சொல்லப்பட்டிருக்கிறது . தன்னை பண்படுத்துவதாலேயே ஞானம் வளர்கிறது.அந்த ஞானத்தை அடைய ஒன்பது நற்பண்புகளை முதற்கண் பகவத்கீதையில் எடுத்து உரைக்கிறார். முக்திக்கு மட்டுமன்றி தினசரி வாழ்க்கைக்கும் அவைகள் மிகவும் நன்மை பயக்கும் .
अमानित्वमदम्भित्वमहिंसा क्षान्तिरार्जवम् |
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रह: ||BG13.8||
आचार्योपासनं शौचं स्थैर्यमात्मविनिग्रह: ||BG13.8||
amānitvam adambhitvam ahinsā kṣhāntir ārjavam I
āchāryopāsanaṁ śhauchaṁ sthairyam ātma-vinigrahaḥ II
āchāryopāsanaṁ śhauchaṁ sthairyam ātma-vinigrahaḥ II
Humbleness; freedom from hypocrisy; non-violence; forgiveness; simplicity; service of the Guru; cleanliness of body and mind; steadfastness; and self-control; dispassion toward the objects of the senses.
தற்பெருமையின்மை, தருக்கின்மை, அஹிம்சை, பொறுமை, நேர்மை, குருசேவை, தூய்மை, விடாமுயற்சி, தன்னடக்கம்.
1.அமானித்வம்- மற்றவர்களைவிட தன்னை உயர்ந்தவனாக நினையாதிருத்தல்.
2.அதம்பித்வம் - தற்பெருமையின்மை
3. அஹிம்சை- பிறர்களுக்கு தீங்குசெய்யாதிருத்தல்
4.க்ஷாந்தி - துன்பம் வரும்போது அதைப்பொருத்தல்
5.ஆர்ஜவம் -உள்ளொன்றுவைத்து புறம் ஒன்று பேசாதிருத்தல்
6.ஆசார்ய உபாசனை- குருவுக்கு பணிவிடை செய்தல்
7.சௌசம்-உள்ளத்தையும்,உடலையும்தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்
8.ஸ்தைர்யம்- ஆத்ம சாதனத்தில் விட முயற்சி
9. ஆத்மவினிகிரஹ: - உடலும் இந்திரியங்களும் வெளி விஷயங்களில் செல்லாதிருத்தல் .
சென்ற இடத்தால் செலவிடா தீதொரீஇ
நன்றின்பால் உய்ப்பது அறிவு
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:422)
பொழிப்பு (மு வரதராசன்): மனத்தைச் சென்ற இடத்தில் செல்லவிடாமல், தீமையானதிலிருந்து நீக்கிக் காத்து நன்மையானதில் செல்லவிடுவதே அறிவாகும்.

No comments:
Post a Comment