Sunday, June 12, 2022

முக்குறும்பு அறுத்த மாமனிதர்

  மலர்: 019


 எம்பெருமானார், ஆழ்வான், முதலியாண்டான் & ஸ்வாமி ஆளவந்தார்

विध्या मदो  धन मदो  तृतीयो अभिजनो मदः I
मदा एते अवलिप्तानां एत एव सतां दमः II

Vidhyaa mado dhana mado triteeyo abhijano madah I

Madaa ete avaliptaanam ete eva sataam damah II

(मदः- Pride; दमः-Self-control)


கல்வி, செல்வம், நற்குலப்பிறப்பு இவைகள் தீயவர்களிடம் பிறரை துன்புறுத்தவும் ,செறுக்கை அதிகரிக்கவும் பயன்படுகிறது . அதே சமயம் நல்லோர்களிடத்து இந்திரிய நிக்கிரஹத்துக்கும், பிற நன்மைகளை செய்வதற்கும் ஹேதுவாகிறது.

ஸ்ரீவைஷ்ணவ    குருபரம்பரையில்     மிக  உன்னத   இடத்தை
அலங்கரித்திருப்பவர்   ஸ்ரீவத்ஸாங்க  மிச்ரர்   என்னும்  கூரத்து  ஆழ்வான்.எம்பெருமானார்க்கே    அற்றுத்  தீர்ந்த     பக்தி மிக்கவர்    கூரேசர். கூரத்தாழ்வானின் பிறப்பிடம் காஞ்சிபுரத்து அருகே கூரம் என்ற சிறிய கிராமம்(கி.பி 1010).
கூரத்தாழ்வான் திருநட்சத்திரம்- தை, ஹஸ்தம்வரதராஜ ஸ்தவம் சுந்தர பாஹுஸ்தவம் அதிமானுஷஸ்ஸ்தவம் ஸ்ரீவைகுண்டஸ்தவம், ஸ்ரீ ஸ்தவம் என்ற பஞ்ச ஸ்தவங்களை இயற்றியவர்.
கூரத்தாழ்வான் முக்குறும்பு என்று சொல்லக் கூடிய மூன்று செருக்குகளை, கல்வி செருக்கு, செல்வ செருக்கு, குல செருக்கு, வென்றிருப்பதாக திருவரங்கத்தமுதனார் புகழ் பாடுகிறார்.

மொழியைக் கடக்கும் பெரும் புகழான் வஞ்ச முக்குறும்பு ஆம்
குழியைக் கடக்கும் நம் கூரத்தாழ்வான் சரண் கூடியபின்
பழியைக் கடத்தும் இராமாநுசன் புகழ் பாடி அல்லா
வழியைக் கடத்தல் எனக்கு இனியாதும் வருத்தம் அன்றே.

கூரத்தாழ்வானின் புகழை வார்த்தைகளால் சொல்ல முடியாது. மொழியின் எல்லைகளை கடந்தது அவன் புகழ்.
வஞ்சகமான மூன்று கொடிய குணங்களில் இருந்து கடக்க அவன் நாமமே சரண்.
நாம் சேர்த்து வைத்த பழியையை கடத்த இராமானுஜனின் புகழ் அல்லால் வேறு ஒன்றும்  இல்லை.

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.

No comments:

Post a Comment