மலர்: 042
விற்றுவக்கோடு என்பது கேரள நாட்டில் உள்ள ஒரு அற்புதமான திவ்விய தேசம். குலசேகர ஆழ்வார் இந்த திவ்ய தேசத்துஎம் பெருமாளைப்பற்றி ஒரு பதிகம் அருளியுள்ளார் . அதில் நமக்கும் இறைவனுக்கும் உள்ள நவவித சம்பந்தத்தை பல அருமையான உவமைகளால் விவரிக்கிறார்.
தருதுயரம் தடாயேலுன்
சரணல்லால் சரணில்லை,
விரைகுழுவு மலர்ப்பொழில்சூழ்
விற்றுவக்கோட் டம்மானே,
அரிசினத்தா லீன்றதாய்
அகற்றிடினும், மற்றவள்தன்
அருள்நினைந்தே யழும்குழவி
அதுவேபோன் றிருந்தேனே. 1
'விற்றுவக்கோட்டு அம்மானே!உன்னைத் தஞ்சமாக வந்தடைந்தேன். நீயே என்னைக் காக்க வேண்டும். என் துன்பத்தை நீக்கா விட்டாலும், தாய் அடித்தாலும் மீண்டும் சென்று அவள் அன்பையே எதிர்பார்க்கும் குழந்தையைப் போல் தாயின் அருளையே நினைந்து அழும் குழந்தை போலவும், வேறு கதியின்றி இருக்கிறேன். ஆதலால், உன் சரணல்லால் சரணில்லை'என்று ஆழ்வார் அந்த எம்பெருமானைச்சரணடைகிறார்.குலசேகரஆழ்வார்தமது
முகுந்தமாலையிலும்
(मुकुन्दमाला) இதேபோல் ஒரு அழகான பாடலை அருளியுள்ளார் .
नरके वा नरकान्तक प्रकामम् ।
चरणौ ते मरणेऽपि चिन्तयामि ॥ ६ ॥
divi vā
bhuvi vā mamāstu vāsō
narakē vā narakāntaka prakāmam ।
avadhīrita śāradāravindau
charaṇau tē maraṇē'pi chintayāmi ॥ 6 ॥
O Lord, killer of the demon
Naraka! Let me reside either in the realm of the demigods, in the world of
human beings, or in hell, as You please. I pray only that even at the point of death
I may remember Your two lotus feet, whose beauty defies that of the lotus
growing in the Śarat season.
SRI KRISHNAYA THUBHYAM NAMAH

No comments:
Post a Comment