Thursday, April 21, 2022

மையோ, மரகதமோ, மறிகடலோ

  மலர்: 006

இராமன் சீதையோடும் இலக்குவனோடும் கானகத்தில் செல்லுதல் : 
இந்த காட்சி பிரணவத்தை குறிக்கும் என்று பெரியோர் கூறுவர். இராமன் -பரமாத்மா , லக்ஷ்மணன் -ஜீவாத்மா ,
சீதா -இருவரையும்  சேர்த்து வைக்கும் பிராட்டி
.

अग्रतः प्रययौ रामस्सीता मध्ये सुमध्यमा।
पृष्ठतस्तु धनुष्पाणिर्लक्ष्मणोऽनुजगाम ह।।3.11.1।।
Agratah prayayau Ramah Sita madhye sumadhyamaa I
Prushtatastu dhanur paanih lakshmano anujagaama ha II

Rama walked in front, Sita with a beautiful waist, in the middle and Lakshmana holding the bow, behind them II









வெய்யோன் ஒளி தன் மேனியின்
    
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
    
இளையானொடும் போனான் -
மையோ, மரகதமோ, மறி
    
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
    
அழியா அழகு உடையான்
.

வெய்யோன் ஒளி தன் மேனியின் விரிசோதியின் மறை -
சூரியனது ஒளியானது தன்திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லையாய் மறைந்துவிடும்படி
பொய்யோஎனும் இடையாளொடும் - இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும்
இளையானொடும்தம்பியாகிய இலக்குவனோடும்;
போனான் - (காட்டு வழியே) நடந்து செல்லலானான்.

 மை, அடர்ந்து கருநிறம் உடையது; செறிவான கருமைக்கு
உவமையாயிற்று, மரகதம் பசுமைநிறம்படைத்ததாய்க் குளிர்ச்சி தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல்நீலநிறம் படைத்ததாய் இடையறாது இயங்கிக்கொண்டுள்ளது
ஆதலின்,  இயங்குகின்ற இவனது சோபைக்கு உவமையாயிற்றுமழை முகில் - கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடையகாரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது ஆதலின் உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறாஇயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமைகாண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனிஉவமை சொல்லமாட்டாமையாகிய இரக்கமும் தோன்றிஐயோஎன முடித்தார்

(விளக்கம் :தமிழ் இணையக் கல்விக்கழகம்)

கம்பனின் மானசீக ஆசானான சடகோபனும் பெரிய திருவந்தாதி யில் கண்ணன் திருவடிகளை பற்றினவர்களுடைய கொடிய வினைகள் இருக்கும் இடம் தெரியாமல்  எங்கோ பறந்து போயின என்று பாடுகி றார்.

வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங்கிற்றும் கண்டிலமால், ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா. மருங்கு.54

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.



No comments:

Post a Comment