Wednesday, May 18, 2022

காரேய் கருணை இராமானுச!

  மலர்: 014

अद्वेष्टा सर्वभूतानां मैत्रः करुण एव
निर्ममो निरहङ्कारः समदुःखसुखः क्षमी BG12.13
संतुष्टः सततं योगी यतात्मा दृढनिश्चयः
मय्यर्पितमनोबुद्धिर्यो मद्भक्तः मे प्रियः BG12.14

12.13 He who hates no creature, who is friendly and compassionate to all, who is free from attachment and egoism, balanced in pleasure and pain, and forgiving.
12.14 Ever content, steady in meditation, self-controlled, possessed of firm conviction, with the mind and intellect dedicated to Me, he, My devotee, is dear to Me.

பகவான் கீதையில் சொல்லியபடி எல்லா குணங்களும் பொருந்திய ராமாநுஜரைப்பற்றி திருவரங்கத்து அமுதனார் தம்முடைய நூற்று அந்தாதியில் பலபடியாக புகழ்ந்து உள்ளார் .












 


சித்திரை திருவாதிரை! இராமானுசரின் திருநட்சத்திரம்/பிறந்தநாள்

தனக்கு பண்ணின உபகாரத்தை நினைந்து நேரே ஸ்ரீ எம்பெருமானாரை நோக்கிதேவரீர் உடைய அருளின் திறத்தை இவ் உலகில் யார் தான் அறிவார் என்கிறார்



காரேய் கருணை இராமானுச! இக்கடலிடத்தில்
ஆரே அறிபவர் நின்னருளின் தன்மை?! அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! வந்து நீ என்னை உய்த்த பின் உன்
சீரே உயிர்க்குயிராய் அடியேற்கு இன்று தித்திக்குமே!

கார் ஏய்-கரு முகிலை ஒத்த
கருணை -கிருபையை உடைய
இராமானுச -எம்பெருமானாரே -நான்
அல்லலுக்கு -துன்பத்திற்கு
நேரே உறைவிடம்-நேரே குடி இருக்கும் இடமாக உள்ளேன்
நீ வந்து -தேவரீராக எழுந்து அருளி
என்னை உற்ற பின்-என்னை யுய்த்த பின்- –அல்லலுக்கு உறைவிடமான என்னை அடைந்ததற்குப் பிறகு
உன் சீரே -தேவரீர் உடைய கல்யாண குணங்களே
உயிர்க்கு -என்னுடைய ஆத்மாவுக்கு
உயிராய் -தாரகமாய்
அடியேற்கு-அடியானான எனக்கு
இன்று தித்திக்கும் -இப்பொழுது இனிக்கின்றன
நின் அருளின் தன்மை -தேவரீர் உடைய கிருபையின் ஸ்வபாவத்தை
இக்கடல் இடத்தில் -இந்தக் கடல் சூழ்ந்த உலகத்தில்
யார் அறிபவர் -யார் தான் அறிவார்

மேகம் போன்று பலன் எதிர்பாராமல் னைத்து உயிர்களுக்கும் அருளும் கருணை கொண்ட எம்பெருமானாரே!  கடல் சூழ்ந்த இந்த உலகத்தில் யார் தான் உன் கருணையின், அருளின் ஆழத்தை அறிந்தவர்கள்?!
அடியேன் எல்லா துன்பங்களுக்கும் இயற்கையான உறைவிடம்! நீர் வந்து என்னை ஏற்றுக்கொண்டு நல்வழியில் செலுத்திய பின்னர் உமது பெருமைகளே அடியேனின் உயிருக்கு உயிராக நின்று இப்போதெல்லாம் இனிக்கின்றதே!

கண்ணன் கழலிணை, - நண்ணும் மனமுடையீர்,
எண்ணும் திருநாமம், - திண்ணம் நாரணமே.


No comments:

Post a Comment